
இந்த சம்பவம் அந்தப்பகுதியில் மிகுந்த பரப்பரப்பை ஏற்படுத்தியது. இந்திய தேசத்தில் தேசபக்தியை மொத்தமாக ஏகபோக உரிமை கொண்டாடி வரும் சங்பரிவார அமைப்புகள் சும்மா இருப்பார்களா? இந்த நிகழ்வை வைத்து கலவர விதையை தூவி முஸ்லிம்களை அறுவடை செய்ய மானாவாரியாக முடிவுகள் எடுக்கப்பட்டன.
சங்பரிவாரத்தின் அனைத்து அமைப்புகளும் குதியாய் குதித்தன. கடையடைப்புக்கு பஜ்ரங் தள், வி.எச்.பி, போன்ற "உணர்ச்சிவயப்பட்ட தேசபக்தி" அமைப்புகள் அழைப்புகள் விடுத்தன. காவி பயங்கரவாதத்தின் அரசியல் உருவம் பா.ஜ.க. ஒரு படி மேலே போய், கொடி ஏற்றப்பட்ட இடத்தை கழுவி சுத்தம் செய்ததாம். (பாக்.கிலிருந்து வரும் சிந்து நதி நீரை எப்படி சுத்தம் செய்வார்கள்???)
அதன் பின், போலிஸார் விசாரணையை மேற்கொண்டனர். நம்பித்தான் ஆகவேண்டும் விசாரணை செய்தவர்கள், மத அபிமானத்தை விடுத்து மனிதாபிமானத்தோடு விசாரித்ததில், இந்த செயலை செய்தவர்கள் ராமசேனா என்ற ஹிந்துத்துவ தீவிரவாத அமைப்பின் மாணவர் பிரிவை சார்ந்த தீவிரவாதிகள் என்று தெரிய வந்துள்ளது.
பாகிஸ்தான் கொடியை ஏற்றி பழியை முஸ்லிம்களின் மேல் சுமத்தி கலவரத்தை தூண்ட வேண்டும் என்பதே நோக்கம்.இதே இயக்கம் தான் , கலவரத்தை தூண்டுவதற்கு "ரேட்" பேசி காசு வாங்கிய இயக்கம் என்பதை இங்கு நினைவில் கொள்ள வேண்டும்.
காந்தியை கொன்ற கோட்ஸே என்ற ஆர்.எஸ்.எஸ். அபிமானியின் கையில் "இஸ்மாயில்" என்று பச்சை குத்தியிருந்தது. காந்தியை கொன்றது ஒரு முஸ்லிம் தான் என்று இந்திய முஸ்லிம்களின் மேல் பழியை போடுவதே நோக்கம். இன்றைக்கும் அந்த வழிமுறை தொடர்கிறது. கோட்ஸெவின் நீட்சியாக..
இந்த நிகழ்வை ஊடகங்கள் பரபரப்பாக்கவில்லை. ஏனென்றால் காவி தீவிரவாத்திற்கு மீடியாவில் டி.ஆர்.பி. ரேட்டிங் இல்லையாம்.
இதை மட்டும் முஸ்லிம்கள் செய்திருந்தால்...???? .
ராமசேனாவின் செயற்கை மதக்கலவரங்கள்! தெஹல்கா அம்பலம்.
பெங்களூர்: பணத்திற்காக எந்தவிதமான மதக் கலவரத்தையும் நடத்தத் தயாராக
இருப்பதாக ஸ்ரீராம் சேனா அமைப்பின் தலைவர் பிரமோத் மாலிக் கூறியதை ரகசியக் கேமரா
மூலம் படம் பிடித்து வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது தெஹல்கா.
கிட்டத்தட்ட ஒரு கூலிப்படைத் தலைவனைப் போல அதில் பேசியுள்ளார்
முத்தலிக்.
47 வயதான முத்தலிக் கர்நாடக மாநிலம் பெல்காம் மாவட்டம் ஹக்கேரியில் பிறந்தவர்.
1975ம் ஆண்டு 13 வயதாக இருந்தபோது ஆர்எஸ்எஸ்ஸில் இணைந்தார். 2004ம் ஆண்டு பஜ்ரங்
தளத்தின் தென் இந்திய ஒருங்கிணைப்பாளராக நியமிக்கப்பட்டார்.அரசியலில் நுழையத்
துடித்த அவரை பாஜக தேர்தலில் புறக்கணித்து விட்டது. சீட் தரவில்லை. இதனால் 2005ம்
ஆண்டு ஆகஸ்ட் மாதம் பஜ்ரங் தளத்தை விட்டுவெளியேறினார் முத்தலிக்.பின்னர் கர்நாடக
மாநில சிவசேனா தலைவராக நியமிக்கப்பட்டார்.அதே ஆண்டில் அதிலிருந்தும் விலகினார்.
பின்னர் 2006ம் ஆண்டு ராஷ்டிரிய இந்து சேனா என்ற அமைப்பைத்
தொடங்கினார்.கர்நாடகத்தில் மிகப் பெரிய அளவில் மத ரீதியான பதட்டத்தை
ஏற்படுத்தினார். இவர் மீது மத கலவரங்களை தூண்டும் வகையில் பேசியதாக கர்நாடகத்தின்
11 மாவட்டங்களில் வழக்குகள் உள்ளன. மேலும் 3 மாவட்டங்களுக்குள் நுழையவும் தடை
விதிக்கப்பட்டது.
இந்நிலையில் தான் 2008ம் ஆண்டு ஸ்ரீராம் சேனாவைத் தொடங்கினார். மங்களூரில் பப்
ஒன்றில் புகுந்து அங்கிருந்த பெண்களை ரோட்டில் உடைகள் கிழியக் கிழிய அடித்து
வன்முறை வெறியாட்டம் நடத்தியது ஸ்ரீராம் சேனா.இதையடுத்து இவருக்கு ஜட்டிகள் அனுப்பி
பெண்கள் அமைப்புகள் போராட்டம் நடத்தின.
இந்நிலையில் ரூ.60 லட்சம் பணம் கொடுத்தால் கர்நாடகத்தில் மிகப் பெரிய அளவில்
வன்முறையை ஏற்படுத்த தயாராக இருப்பதாக கூறி பெரும் சிக்கலில் மாட்டியுள்ளார்
முத்தலிக்.
இவரை அம்பலப்படுத்தியிருப்பது தெஹல்கா பத்திரிக்கையும், இந்தியா டுடே
குழுமத்தின் ஹெட்லைன்ஸ் டுடே தொலைக்காட்சியும்.பெங்களூர் அல்லது மங்களூரில்
கலவரத்தை ஏற்படுத்த தாங்கள் ஆட்களை திரட்டித் தருவதாக முத்தலிக்கும், அவரது
அமைப்பின் தலைவர்களான பிரசாத் அட்டவார், பவானி ஆகியோரும் பேசியதை ரகசிய வீடியோ
கேமரா மூலம் பதிவு செய்து அம்பலப்படுத்தியுள்ளன தெஹல்காவும், ஹெட்லைன்ஸ்
டுடேவும்.
இந்து- முஸ்லீம் ஒற்றுமை குறித்த கண்காட்சியை நடத்தப் போவதாகவும், அதற்கு நல்ல
பப்ளிசிட்டியை தேடித் தருமாறும் கூறி தெஹல்கா மற்றும் ஹெட்லைன்ஸ் டுடே சார்பில்
நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் போல அனுப்ப்ப்பட்ட நிருபரிடம் கலவரத்தை ஏற்படுத்துவது
குறித்து இந்த மூன்று பேரும் பேசியுள்ளனர்.பெங்களூர் அல்லது மங்களூரில் முஸ்லீம்கள்
அதிகம் உள்ள இடங்களில் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்யுமாறும், பிரபலமான முஸ்லீம் தலைவரை
அழைக்குமாறும், அதில் தாங்கள் கலவரத்தை ஏற்படுத்துவதற்கு ஏற்பாடு செய்வதாகவும் அந்த
மூன்று பேரும் கூறியுள்ளனர்.
இதற்காக ரூ. 60 லட்சம் செலவாகும் என்று முத்தலிக் கூறியுள்ளது அந்த வீடியோ
பதிவில் உள்ளது.முத்தலிக்கின் இந்தப் பேச்சால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
No comments:
Post a Comment